595சந்தொடு காரகிலும்
      சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
      உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
      குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
      திருமாலடி சேர்வர்களே             (10)