6தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
      திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
      குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
      தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே             (6)