617நாணி இனி ஓர் கருமம் இல்லை
      நால்-அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
      பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
      மாயனைக் காணிற் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
      ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்.             (2)