626கண்ணன் என்னும் கருந்தெய்வம்
      காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
      புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
      பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
      வாட்டம் தணிய வீசீரே             (1)