628கஞ்சைக் காய்ந்த கருவில்லி
      கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
      நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
      அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
      மார்விற் கொணர்ந்து புரட்டீரே             (3)