629ஆரே உலகத்து ஆற்றுவார்?
      ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
      தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன்
      அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
      பருக்கி இளைப்பை நீக்கீரே             (4)