63 | உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (1) |
|