630அழிலும் தொழிலும் உருக் காட்டான்
      அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
      சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
      நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு
      குளிர முகத்துத் தடவீரே             (5)