631நடை ஒன்று இல்லா உலகத்து
      நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
      குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
      போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
      போகா உயிர் என் உடம்பையே             (6)