632வெற்றிக் கருளக் கொடியான்தன்
      மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய்
      வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலைதன்னைக்
      குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவை தீர
      அணைய அமுக்கிக் கட்டீரே             (7)