633உள்ளே உருகி நைவேனை
      உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
      கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
      கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
      எறிந்து என் அழலைத் தீர்வேனே             (8)