635அல்லல் விளைத்த பெருமானை
      ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி
      விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
      வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
      துன்பக் கடலுள் துவளாரே             (10)