642பொருத்தம் உடைய நம்பியைப்
      புறம்போல் உள்ளும் கரியானைக்
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
      கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா-கணங்களால்
      ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (7)