முகப்பு
தொடக்கம்
643
வெளிய சங்கு ஒன்று உடையானைப்
பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே (8)