644நாட்டைப் படை என்று அயன் முதலாத்
      தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
      விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும்
      களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (9)