648எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
      எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்
      தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற
      அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு
      அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)