651 | அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும் தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6) |
|