653 | கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள் கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக் கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும் மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே (8) |
|