654தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
      குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
      மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்
      பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!             (9)