66வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள
      வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்
      கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
      என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே             (4)