66 | வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே (4) |
|