660தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
      உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
      அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று
      அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
      ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே             (4)