662ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
      ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி
      இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்
      காதல் செய்யும் என் நெஞ்சமே            (6)