666அல்லி மா மலர்-மங்கை நாதன்
      அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில்
      என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்
      கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்
      தொண்டர் தொண்டர்கள் ஆவரே             (10)