முகப்பு
தொடக்கம்
682
வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர்தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே (7)