70 | உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8) |
|