700தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்
      தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று
பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு
      பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
      யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
      அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.             (4)