706அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
      தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி
      எள்கி உரைத்த உரையதனைக்
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்
      குலசேகரன் இன்னிசையில் மேவிச்
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
      சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே.            (10)