709முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்
      முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே
      எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
      விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
      நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே.             (3)