71 | பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (9) |
|