712 | தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே (6) |
|