716 | வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே (10) |
|