72 | செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (10) |
|