முகப்பு
தொடக்கம்
730
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை
வேண்டாதே, விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ
எம்பெருமான் என் செய்கேனே (2)