734அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல்
      கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே
      முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
      கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
      இழிதகையேன் இருக்கின்றேனே             (6)