738தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும்
      சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
      கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
       வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
      மனு-குலத்தார் தங்கள் கோவே             (10)