746குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
      குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்
      இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
      அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே             (7)