748 | செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் உறைவானை மறவாத உள்ளந்தன்னை உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே (9) |
|