749 | அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10) |
|