873வேத நூற் பிராயம் நூறு
      மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
      நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
      பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
      அரங்க மா நகருளானே             (3)