முகப்பு
தொடக்கம்
875
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
தொழும்பர்சோறு உகக்குமாறே (5)