875பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
      பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
      உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
      தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
      தொழும்பர்சோறு உகக்குமாறே            (5)