முகப்பு
தொடக்கம்
876
மறம் சுவர் மதில் எடுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
புள் கௌவக் கிடக்கின்றீரே (6)