877புலை-அறம் ஆகி நின்ற
      புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
      காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
      சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
      தேவனே தேவன் ஆவான்             (7)