878வெறுப்பொடு சமணர் முண்டர்
      விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
      போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
      கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
      அரங்க மா நகருளானே             (8)