முகப்பு
தொடக்கம்
879
மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
கழலிணை பணிமின் நீரே (9)