879மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
      மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
      ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
      அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
      கழலிணை பணிமின் நீரே             (9)