885மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
      விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
      புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
      ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
      அழகன் ஊர் அரங்கம் அன்றே             (15)