891பணிவினால் மனமது ஒன்றிப்
      பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
      தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
      அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
      மனத்தினால் நினைக்கல் ஆமே?             (21)