892பேசிற்றே பேசல் அல்லால்
      பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
      அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
      வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
      பேதை நெஞ்சே நீ சொல்லாய்             (22)