893கங்கையிற் புனிதம் ஆய
      காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
      பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
      கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
      ஏழையேன் ஏழையேனே             (23)