894வெள்ள-நீர் பரந்து பாயும்
      விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
      கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
      ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
      கள்ளத்தே கழிக்கின்றாயே             (24)