896போதெல்லாம் போது கொண்டு உன்
      பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
      திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
      கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
      என் செய்வான் தோன்றினேனே?             (26)